Saturday, October 5, 2013

பென்டிரைவ இப்படி பார்மேட் பண்ணுங்க..

இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருப்பது பென்டிரைவ் என்ற ஒரு பொருள் தான் தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது பென்டிரைவ்கள்.இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும்

கணினியில் பென்டிரைவைஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.

காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம்.

ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்


பென்டிரைவ் பார்மேட்

முதலில் பென்டிரைவை உங்கள் கணிணியில் சொருகி கொள்ளுங்கள்.

அதன் பிறகு Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.


இப்பொழுது பென்ட்ரைவ் எந்த டிரைவில் உள்ளது எனப்பாருங்கள். My Computer ஐ திறப்பதன் மூலம் இதை கண்டறியலாம்.


உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

attrib -h -s -r /s /d *.*

என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.


இப்போது Enter அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.


Sunday, August 11, 2013

உங்கள் கணினியின் வன்பொருள்களை பற்றி அறிய ஒரு மென்பொருள்

உங்கள் கணினி வன்பொருள்களில் ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது அதை நிவர்த்தி செய்ய அல்லது உங்கள் கணினி வன்பொருள்கள் பற்றி கற்றுக்கொள்ள, உங்ளுக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம் பயனுள்ளவையே. HWiNFO என்கின்ற புதிய மென்பொருள், உங்கள் கணினி வன்பொருள்கள் பற்றி நீங்கள் கேள்விப்படாத விடயங்களை எல்லாம்கூட காட்டும்.
இந்த மென்பொருளிலுள்ள முக்கியமான வசதி என்னவெனில், நிகழ்நிலையில் உள்ள வெப்பநிலை, மின்சாரம் பயன்படுத்தப்படும் அளவு என்பனவற்றைக் கூட வெளிக்காட்டும் என்பதுதான்.
இலவசமான இந்த மென்பொருளை உடனே சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள் : www.hwinfo.com

Wednesday, July 24, 2013

கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய சில வழிகள்!

கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய சில வழிகள். கணினியில்
ஏற்படும் பல தவறுகளை கண்டறிந்த பின், அதற்கு தீர்வைத் தேடுவது 
சுலபமான விரைவான முறை ஆகும். இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே 
தெரிந்தவைதான் என்பவர்கள் தவிர, மற்றவர்கள் படிக்கலாம். 
சில தினங்களுக்கு முன்னர் கணினி செயல்முறைப் பரீட்சை ஒன்றில்
தரப்பட்ட கேள்விகளில் இருந்து தொகுத்து தரப்படுகிறது.

1.event Viwer இல் உள்ள log இல் என்ன error எனக் காட்டப்பட்டுள்ளது 
   என்பதைக் கண்டு திருத்திக் கொள்வது.

Start -Controlpanel – Administrative Tools -Event Viewer (அல்லது View event logs)

அல்லது

 start – run இல் eventvwr.msc என்பதைக் கொடுக்கவும்.

2.Start -Control Panel -மேலே உள்ள address bar இல் controlpanel ற்குப் அருகே 
   உள்ள அடையாளத்தைக் சொடுக்கி(அல்லது view by பக்கத்தில் உள்ள 
   அடையாளத்தை சொடுக்கி small icons என்பதை தெரிவு செய்யலாம்) வரும் 
   பட்டியலில் Troubleshooting என்பதை தெரிவு செய்யலாம்.

3.முதலில் மால்வெயர் ஸ்கன் செய்து கொள்ளவும். அதற்கு start – run இல்
   mrt என்பதைக் கொடுக்கவும்.

4.Control Panel -All Control Panel Items-Performance Information and Tools -Advanced Tools 
   இங்கே சென்றால் என்ன தவறு என்பதைக் காட்டும்.Fix error சரி செய்யலாம்.

5.CPU,Disk,RAM,Network போன்றவை எப்படி வேலை செய்கிறது எவ்வளவு
   பயன்படுத்துகிறது என்பதைக் காண start – run -perfmon.exe /res என்பதைக் 
   கொடுக்கவும்.

6.இங்கே சென்று தற்காலிக சேமிப்புக்களை அழிக்கலாம்..start – run – %temp%

7.OS இன்ஸ்டால் செய்யும் போதே startup disk,repair disk தயாரித்து 
   வைத்திருந்தால் பல தவறுகளை சுலபமாக சரி செய்து விடலாம்.

8.start -run – chkdsk …….disk இல் தவறுகளைக் கண்டறிந்து திருத்துகிறது.

9.start -run – perfmon.msc (perfmon) கொடுத்து அல்லது அங்கே உள்ள 
   open Resource manager சென்று free  space,Ram,வேலை செய்து கொண்டிருக்கும்
   ப்ரொகிராம்களை கண்டறியலாம்.தேவையற்றவற்றை நீக்கலாம்.

இங்கே Reliablity Monitor ஐயும் (expand) Reliability and Performance- Monitoring Tools,
 -Reliability Monitor. அல்லது start -run- perfmon /rel இங்கே அனைத்து 
பிழைகளையும் திகதியிட்டுக் காட்டும்.அத்துடன் அதற்குரிய தீர்வையும் 
காட்டும்.

10.சிஸ்டம் தவறுகளை திருத்திக் கொள்ள- start -run – sfc. /scannow கொடுத்து 
    சரி செய்யலாம்.

11.start – run இல் msconfig கொடுத்து தேவையற்ற startup program களை நீக்கலாம்.
     இங்கிருந்து safemode ஐயும் தொடங்கலாம்.

12.start – run – cleanmgr கொடுத்து தேவையற்ற files,empty folder,dup.folder 
    போன்றவற்றை அழித்து கணினியை விரைவு படுத்தலாம்.

13.கணினியில் தவறு ஏற்படும் போது அனேகமான சந்தர்ப்பங்களில் error code 
     சேர்ந்து வரும்.அதைக் குறித்துக் கொண்டால் பிழைகளை கண்டறிந்து 
     சுலபமாக சரி செய்து கொள்ளலாம்.

ப்ரௌசரில் 400,403,404,500 இப்படியும்; விண்டொஸ் (உ+ம்.601-உங்களுக்குத் 
தெரியாமலேயே ஒரு செய்ல் கணினியில் நடந்து கொண்டிருப்பதால் 
கணினியை மூட முடியாமல்,வேறு ஒன்றை திறக்க முடியாமல்,
இணையத்தை தொடக்க முடியாமல்); போன்ற error code தெரிந்து கொண்டால் 
சரி செய்வது சுலபம்.

14.start – run – devmgmt.msc கொடுத்தால் device manager வரும்.அங்கே view இல்
    சென்றால் ghosted devices (hidden devices ) காட்டும்.அதில் பல நமக்குத் 
    தேவையில்லாதவை.(எது தேவை எது தேவையில்லாதவை என்று 
    தெரியாமல் களத்தில் இறங்கினால் ஆபத்து.)

15.தேவையற்ற மென்பொருட்களை தரவிறக்காதீர்கள்.அவை கணினி 
     வேகத்தைக் குறைப்பதுடன், மால்வெயர் களும் வந்து விடலாம்.
     வேகத்தை அதிகரிக்க மென்பொருட்களை நாடாமல்,அவை 
     இல்லாமலேயே, நாமாகவே வேகத்தை அதிகரிக்க முயல வேண்டும்.
     சிறிய மாற்றங்களை system ,registry இல் செய்வதன் மூலம் வேகத்தை 
     சிறிது,சில bytes,அதிகரிக்கலாம்.

16. மேலே சொன்னவை தவிர,System checkup என்ற மென்பொருள் மூலம் 
      கணினி,நெட்வேர்க் பிழைகளைக் கண்டறிந்து சரி செய்து கொள்ளலாம்.
      (பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள் மட்டுமே தானாக சரி செய்யும் 
      வசதி கொண்டது.) இலவச மென்பொருளில் error details முழுவதும் 
      காட்டப்படும்.அவற்றை நாமே சரி செய்து கொள்ளலாம்.

Saturday, July 13, 2013

IP Address (Internet Protocol) என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் 
ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். 
அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன 
இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. 
இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது.


அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை
மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம்
வழங்கப் படமாட்டது. இதனை ஆங்கிலத்தில் Uniqueness எனப்படுகிறது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த  
IPமுகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது. 
இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் 
இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,

இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை
இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான
(Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். 
இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு 
பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான
ஒரு இலக்கமாக இருக்கும்.

ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது 
வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே 
புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 
எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு 
பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.

பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் 
கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு 
எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் 
கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் 
கருதப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு 
நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட 
ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை 
உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான 
இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.

இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 
வெவ்வேறான சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். 
அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் 
கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்.

Monday, May 27, 2013

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் !

புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.

உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !
கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது ! 

Thursday, May 16, 2013

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு! ! ! !

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.

அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.

ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஓன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம்.

இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

https://chrome.google.com/webstore/detail/gmail-offline/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk

இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.

இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow OfflineMail என்பதை தேர்வு செய்யவும்.

இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஓப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும்.

இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள்Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forwardசெய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.

மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print,Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஓப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

Saturday, May 11, 2013

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?

"பென்ட் றைவ்" ஆனது "Data"வினை சேமித்து வைக்கவும் அதை இன்னும் ஒரு இடத்திற்கு கொண்டு செல்லவும் உதவும்.
இந்த Pen Drive இல் 4GB இற்கு மேலே Copy பன்னிக்கொள்ள முடியாது என்பது பற்றி உங்களுக்கு தொரியுமா?
உங்களிடம் 4GB இற்கு மேற்பட்ட ஒரு Pen Drive இருந்தால்,அதில் 4GB இற்கு மே்ற்பட்ட ஒரு  தனியான பைலை  கொப்பி செய்து பாருங்கள்  "File Too Large" என்ற செய்தி தோன்றும்..
ஏன் என்றால் Pen Drive இனை Format  செய்யும்  போது Default ஆகவே FAT32 என்ற File System இல் பண்ணிவிடும்.இதில் தனியான ஒரு File Size இன் அளவு 4GB ஆக வரையருக்கப்பட்டு காணப்படுகிறது.
இதனால்தான் Copy பன்ன முடியாமல் இருக்கிறது. அப்படி என்றால் 4GB இற்கு மேற்பட்ட எந்தவொரு தனி பைலையும் கொப்பி பண்ணிக் கொள்ள முடியாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதை (FAT32) NTFS இற்கு மாற்றினால் மட்டுமே.கொப்பி பண்ணிக் கொள்ள முடியும்.
முறை 01
இது அனைவருக்கும் தெரிந்த முறை தான், இந்த முறையில் Format பண்ணுவதன் மூலம்  உங்களுடய பழைய பைலை இழக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள். Pen Drive மீது Right Click செய்து >> Format >> File System என்பதில் NTFS கொடுத்து Format பண்ணுங்கள்.
முறை 02
இந்த முறை முலம் செய்தால் உங்களுடைய பழைய பைல் அப்படியே இருக்க மாற்றித் தரும்.
RUN இற்கு சென்று (Windows key மற்றும் R ஆகிய key-களை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் பெற முடியும்) CMD என டைப் செய்து OK பண்ணுங்கள்.
பின் , Convert I: /FS:NTFS என டைப் செய்து enter பண்ணுங்கள். (இங்கு I என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்) சிறிது நேரத்தில் மாறிவிடும்.
இந்த 2 முறையும் உங்களுக்கு வெற்றியளிக்கவில்லையா?
 03வது முறை
RUN இல் CMD என டைப் செய்து OK பண்ணுங்கள். பின் chkdsk g: /f என டைப் செய்து என்டா் பண்ணுங்கள். (இங்கு g என்பது உங்கள் Pen Drive இன் ஆங்கில எழுத்தினை குறிக்கும்)
அடுத்து 2-வது முறையை பின்பற்றுங்கள் நிச்சயமாக NTFS இற்கு மாறிவிடும்.

புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க

பாஸ்வேர்ட் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்டவைகளை திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வந்த ‘Win32/Ramnit’ என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வைரஸ் கம்ப்யூட்டர்களில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து, அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது. பின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது.
இந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.
கம்ப்யூட்டரில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது. அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் பைலை அமைக்கிறது.
கம்ப்யூட்டரில் உள்ள EXE, dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இதன் மூலம், கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது.
இவற்றைத் தடுக்க CERTIn குழு, கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது.
1. நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயில்களில் உள்ள இணைப்புகளை டவுண்லோட் செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது.
2. நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது.
3. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயர்வால் அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத, அறிமுகம் இல்லாத போர்ட்களை செயல் இழக்கச் செய்திட வேண்டும்.
4. திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும். எனவே, எந்த காரணத்திற்காகவும், இணையத்திலிருந்து திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.
5. ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும்.

அப்டேட் ஆன பின் விண்டோஸ் இயங்குதளத்தில் கணணி தானாகவே மறுதொடக்கம் ஆவதை நிறுத்துவதற்கு

விண்டோஸ் இயங்குதளத்தை அப்டேட் செய்த பின் தானகவே மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு விண்டோஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகும் போது அதில் ஒப்பன் செய்யப்பட்டிருந்த அனைத்து அப்ளிகேஷன்களும் மூடப்பட்டு விடும்.
ஒரு சில முக்கியமான வேலையில் இருக்கும் போது இப்படி நடந்தால் நம்மை எரிச்சலூட்டும். மேலும் இவ்வாறு மறுதொடக்கம் ஆவது கணனியின் வேகத்தை குறைக்கும்.
லினக்ஸ் இயங்குதளத்தில் அப்டேட் ஆன பின் லினக்ஸ் இயங்குதளம் மறுதொடக்கம் ஆகாது, ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் அவ்வாறு இல்லை. அப்டேட் ஆன பின் மறுதொடக்கம் ஆகும். இவ்வாறு மறுதொடக்கம் ஆவதை முழுவதுமாக ரத்து செய்ய விண்டோஸ் இயங்குதளத்தில் வழி உள்ளது.
முதலில் விண்டோஸ் மற்றும் R கீகளை ஒருசேர அழுத்தி ரன் விண்டோவினை ஒப்பன் செய்யவும் பின் gpedit.msc என்று உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் Computer ConfigurationAdministrative TemplatesWindows ComponentsWindows Update என்னும் வரிசையில் தேர்வு செய்யவும். Windows Update யை கிளிக் செய்தவுடன் வலதுபுறம் தோன்றும் வரிசையில் No auto-restart with logged on users for scheduled automatic updates installations என்பதை இரட்டை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Enabled என்னும் ஆப்ஷன் பொத்தானை தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தவும்.
இனி விண்டோஸ் இயங்குதளம் அப்டேட் ஆன பின் தானகவே மறுதொடக்கம் ஆகாது.

Saturday, April 27, 2013

Welcome

Welcome to My Blog

How to repair corrupted and damaged system files in Windows 7 and Vista

How to repair corrupted and damaged system files in Windows 7 and Vista
If any of the Windows system files are missing or are corrupted, Windows may not behave as expected. For example, some Windows functions may not work, or Windows may crash.
Windows 7, like previous version, has an inbuilt tool called System File Checker tool (SFC.exe) which scans for missing or corrupted system files and repairs them. Using System File Checker tool (SFC.exe), you can determine which file is causing the issue, and then replace the file.

How to scan and repair system files :


  1. Click the Start button[Image: 4f6cbd09-148c-4dd8-b1f2-48f232a2fd33_818.jpg],into the Search box type "cmd"
  2. When Command Prompt appears in the search results, Right click on it and select Run as Administrator

    [Image: mUsmf.png]
  3. Now type the command SFC /SCANNOW and press enter.

    [Image: gLNRS.png]
  4. The System File Checker will now check all the files that make up your copy of Windows and repair any it finds are corrupt.

    [Image: 6LOYt.png]

    Depending on your system, the scan can take up to 15-20 minutes. If the scan encountered system file errors and it fixed them, you will see a confirmation message just like in the screenshot below.

    [Image: FXMT4.jpg]


WARNING : Please note that if you have modified your system files in order to add custom themes to your operating system, running sfc /scannow will revert the system files such as explorer.exe back to it's default state.
Make the appropriate backups of your system files that you have modified for theming if you wish to save them before running sfc /scannow.

Sunday, April 14, 2013

F Key யின் பயன்பாடுகள்

நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல

Microsoft Word இல் இதன் பயன்கள்:
Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
Alt+F4 will Close all Programs.
Ctrl+ F4 will close current Program.

F5
Reload or Refresh
Open the find, replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.

F6
cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்


F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.

F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?

நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,

விபரங்களுக்கு Click here

இங்கே கிளிக் செய்யவும்.

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்
பிறகு

பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் 

Thursday, April 11, 2013

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ , உங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து CALCULATE கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.